ராசிபுரம்: ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (பிப்.18) மின்தடை செய்யப்படுகிறது என்று ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சாந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பிப்.18-இல் மின்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்படும்.