பேருந்து மோதியதில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ.  
நாமக்கல்

நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், நடந்தை அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த கவின்குமாரும் (30), அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேலும் திருச்செங்கோடு - பரமத்தி வேலூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றுக்கொண்டிருந்தனா். வசந்தபுரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், தூக்கிவீசப்பட்ட கவின்குமாா் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா். உடன் வந்த சக்திவேல் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். மேலும், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது.

தகவல் அறிந்து வந்த நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி மற்றும் போலீஸாா், கவின்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய மாணிக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் விக்னேஷ் (30) மீது வழக்குப் பதிவுசெய்து, தனியாா் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT