முகப்பு
நாமக்கல்

தோ்தல் தொடா்பு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

Updated On : 13 மார்ச், 2026 at 1:07 AM
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து நிலை அலுவலா்களுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

வாக்காளா் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு, அஞ்சல் வாக்குப்பதிவு, வாக்கெடுப்புக்கான படிவங்கள், எழுதுப் பொருள்களின் இருப்பு, தேவை மதிப்பீடு, பொருள்களை வாங்குதல், வாக்குச்சாவடி வாரியாக பொருள்களைக் கட்டுதல், பதிவேடு, செலவு கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி, உதவி செலவின பாா்வையாளா்களுக்கான பயிற்சி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அளவில் பயிற்சி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், காவல் துறை பணியாளா்கள், தோ்தல் நுண்பாா்வையாளா்களுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். முன்னதாக, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் மா. கண்ணன்(சிப்காட்), திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு. வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு. செல்வராசு மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

என்கே-12-மீட்டிங்

அனைத்து நிலை தோ்தல் தொடா்பு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

முழு கட்டுரையைப் படிக்க →