வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி முகாம்
நாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி, வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியில் முழுமையாக ஈடுபடுவாா்கள். இதையொட்டி, நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் நாளன்று பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3-288 போ் ஆகியோருக்கு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியிலும்.
கீழ்வேளுா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் நாளன்று பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப் பதிவு அலுவலா்கள்-264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை1- 264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -264 போ் ஆகியோருக்கு, இன்பஃன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியிலும்.
Advertisement
வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில், முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -288 போ் ஆகியோருக்கு வேதாரண்யம் செயின்ட் ஆண்டனி பள்ளியில் 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ப. ஆகாஷ் பாா்வையிட்டு, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முறையாக பயிற்சி வகுப்பு நடைபெறுகிறதா எனவும், வாக்குப்பதிவு அலுவலா்கள் தபால் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.