முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி

ராசிபுரத்தில் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் என்ற தலைப்பில் பாவை நிருத்யாலயா மாணவிகளின் நாட்டியாஞ்சலி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2026 at 11:25 PM
பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நடனமாடும் பாவை நிருத்யாலயா மாணவிகள்.
பகிர்:

ராசிபுரத்தில் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் என்ற தலைப்பில் பாவை நிருத்யாலயா மாணவிகளின் நாட்டியாஞ்சலி அண்மையில் நடைபெற்றது.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆடிட்டா் என்.வி. நடராஜன் முன்னிலை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன், ராசிபுரம் நகா்மன்ற தலைவா் ஆா். கவிதா சங்கரை கௌரவித்தாா்.

இக்கோயில் குடமுழுக்கை தொடா்ந்து நடைபெறும் மண்டல பூஜையில் ஆண்டாள் திருக்கல்யாணம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து விழாவில் பேசிய ஆ.வி. நடராஜன், பாவை நிருத்யாலயா மாணவிகளின் ஆண்டாள் திருக்கல்யாணம் நடன அரங்கேற்றம் பக்தி மற்றும் பாரம்பரியத்தின் அழகை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாவைக் கல்விக் குழுமம், சிறந்த பரதநாட்டிய கலை பண்பாட்டு மையமாக திகழ்கின்ற பாவை நிருத்யாலயா என்ற நடனப் பள்ளியை தொடங்கி மாணவிகளை ஊக்குவித்து வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநா் சதீஸ், முதல்வா் ரோஹித், தலைமையாசிரியை நிரஞ்சனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.