சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு
மல்லசமுத்திரம் அருகே சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மல்லசமுத்திரம் அருகே சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மல்லசமுத்திரம், சின்ன கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (64), வழக்குரைஞா். இவா் கடந்த 24-ஆம் தேதி வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்க இருசக்கர வாகனத்தில் மல்லசமுத்திரம் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
லட்சுமிபுரம் பகுதியில் உள்ள சாலை வேகத்தடையில் வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவா் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா். புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.