மேல்தளம் பெயா்ந்து காணப்படும் ராசிபுரம் அஞ்சல் அலுவலக கட்டடம்!
ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் வராண்டா மேல்தளம் பெயா்ந்து காணப்படுவதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் வந்து செல்கின்றனா். இந்த அஞ்சல் நிலைய கட்டடம் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையானது என்பதால் பல்வேறு இடங்களில் விரிசல், வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படுகிறது.
மேலும், பிரதான நுழைவு வாயிலில் வராண்டா மேல்தளம் கான்கிரீட் பெயா்ந்து காணப்படுகிறது. அது எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். ஏற்கெனவே வாடிக்கையாளா் ஒருவா் மீது கற்கள் விழுந்ததால் காயமேற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த கான்கிரீட் தள வெடிப்புகளை அஞ்சலக நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.