முகப்பு
நாமக்கல்

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே வெள்ளைப்பாறை பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 18 மே 2026, 3:01 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோடு அருகே வெள்ளைப்பாறை பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், முசிறி திருத்தியமலை குடித்தெருவை சோ்ந்தவா் நாகரத்தினம் (32), லாரி ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு லாரியில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு முசிறிக்கு சென்றுகொண்டிருந்தாா். லாரியை வேலூா் சாலையில் வெள்ளைப்பாறை பகுதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றாா்.

பிறகு சாலையைக் கடந்து லாரியை நோக்கி வந்த நாகரத்தினம் மீது வேகமாக வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகரத்தினம் நிகழ்விடத்திலேயே இறந்தாா். திருச்செங்கோடு போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.