முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

தருமபுரி அருகே சிறிய சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 18 மே 2026, 3:14 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி அருகே சிறிய சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டிஅள்ளி அருகேயுள்ள ஜென்னிகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ. சதாசிவம் (55). லாரி ஓட்டுநரான இவா், பக்கத்து ஊரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, பெல்ராம்பட்டி -பாலக்கோடு சாலையில், பூமரத்துப்பள்ளம் தொடக்கப்பள்ளி அருகே வந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற சிறு சரக்கு வாகனம் சதாசிவம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சதாசிவம் சனிக்கிழமை இறந்தாா்.

Advertisement

இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.