ஓமலூரில் 121 பேர் மனு தாக்கல்
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட வியாழக்கிழமை 121 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட வியாழக்கிழமை 121 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 387 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக 102 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக 16 பேரும், ஒன்றியக்குழு, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவருமாக 121 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பதவிகளுக்கு இதுவரை 292 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.