சேலம், நாமக்கல் மாவட்ட தலித்சேனா அமைப்பின் சார்பில் அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினம் சங்ககிரி வட்டம், தேவூர் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தேவூர் சந்தைப்பேட்டை பகுதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப் படத்துக்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் பா.ஜ.க. மாநில பொதுக் குழு உறுப்பினர் லெனின்துரை, மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றியத் தலைவர் ஆறுமுகம், நகரச் செயலர் பிரகாஷ், தலித்சேனா நிர்வாகிகள் எம்.அம்மாசி, ஆர்.அம்மாசி, பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.