சேலம்

இருவேறு சாலை விபத்துகள்: விவசாயி உள்பட இருவர் சாவு

தினமணி

எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் கிராமம், மாதையன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணி (45). விவசாயி. இவர் தனது சொந்த வேலையாக ஞாயிற்றுக்கிழமை மாலை, பூலாம்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக மாதையன் குட்டையை நோக்கி சென்றார். அப்போது, பூலாம்பட்டி - எடப்பாடி சாலையில் வளைவில் எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க வாகனத்தைத் திருப்பியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த
 சுப்பிரமணியை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 இளைஞர் பலி...
 எடப்பாடி - சங்ககிரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
 எடப்பாடியை அடுத்த மேல் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் (44). கூலித்தொழிலாளி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெங்கடேசன் தனது நண்பரை பார்க்க எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளையத்துக்கு சென்றார். இதையடுத்து, தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள கடைப்பகுதிக்கு சென்ற வெங்கடேசன், சாலையைக் கடக்க முயன்றபோது எடப்பாடியிலிருந்து சங்ககிரி நோக்கிச் சென்ற, ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
 இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸார், வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT