சேலம்

எடப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

எடப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
எடப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சித்தூர், செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
இந்த நிலையில் எடப்பாடி - ஜலகண்டபுரம் சாலையில் இருப்பாளி கிராமம், அரியாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன்  (65) என்பவரின் வீட்டின் மேல் பகுதி வழியாகச் செல்லும் மின்சார வயர் பலத்த காற்றினால் வீட்டின் கூரையில் சிக்கியிருந்தது. இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் மீது உரசிய மின்சார வயரை கோவிந்தன் சரிசெய்ய முயான்றார், அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த கோவிந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  கோவிந்தனுக்கு முருகாயி என்ற மனைவியும், இரு மகன்கள், இரு  இருமகள்கள் உள்ளனர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸார் கோவிந்தன் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT