பள்ளியில் குழந்தைகள் தின விழா
எடப்பாடியை அடுத்த மொரசப்பட்டி அமலா பள்ளியில் அண்மையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
எடப்பாடியை அடுத்த மொரசப்பட்டி அமலா பள்ளியில் அண்மையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை பள்ளித் தாளாளர் மணி தொடக்கி வைத்தார். அமலா பள்ளியின் உறுப்பு நிறுவனமான செம்பார்க் பப்ளிக் பள்ளி சார்பில் ராப்பூரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் அருணாசலம் மற்றும் விஜயவாடாவில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் 14 வயதுக்குள்பட்டோர் பிரில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜனனி ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் கார்த்திக், லதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
செம்பார்க் பள்ளி முதல்வர் ஜீனா பெட்சி, நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.