சேலம்

தலைவர்கள் சிலைகளுக்கு தேமுதிக மாவட்டச் செயலர் மரியாதை

DIN

சேலம் புறநகர் மாவட்டச் செயலராக அறிவிக்கப்பட்ட ஏ.ஆர்.இளங்கோவன்,   தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆத்தூரைச் சேர்ந்த  ஏ.ஆர்.இளங்கோவன் தேமுதிக மாநில பொருளாளராக இருந்தார். இவரை சேலம் புறநகர் மாவட்டச் செயலராகவும்,  உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் அன்மையில் அறிவித்தார்.
இதையடுத்து, சென்னையில் இருந்து சேலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த ஏ.ஆர்.இளங்கோவனுக்கு சேலம் மாவட்ட எல்லையான வி.கூட்ரோட்டில் தேமுதிகவினர் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து,  தலைவாசல்,   ஆத்தூரில் உள்ள பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் சிலைகளுக்கு இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ சுபா ரவி,  விஜயகாந்த் மன்றத் துணைச் செயலர் கே.ஏ.சுல்தான் பாஷா,  மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தன், மாணிக்கம், கொங்கு கணேசன், வரகூர் மாணிக்கம், வேலாயுதம், கமலா கருப்பண்ணன், சோலை சந்திரன்,விஜயபாஸ்கர்,  செல்வமணி,  வேங்கை வெங்கடேசன், ஆத்தூர் நகரச் செயலர் சீனிவாசன், இன்பவேல், சாமிநாதன், சங்கர், அண்ணாதுரை,  ஜெயம், அய்யாசாமி, இராஜேந்திரன், சண்முகம், ஜோதி, சுகுணா, மாது, காமாட்சி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT