எலுமிச்சை விலை உயர்வு
தம்மம்பட்டியில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.
தம்மம்பட்டியில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.
தம்மம்பட்டி, துறையூர், செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி , வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை பழங்கள் செடிகளில் இருந்து உதிர்ந்துவிடுவது அதிகரித்துள்ளது. இதனால் கடைகளுக்கு விற்பனைக்கு எலுமிச்சை வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. முன்பு கடைகளில் 3 பழங்கள் ரூ. 10- க்கு விற்றது, தற்போது ஒன்று ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரிப்பு, வரத்துக் குறைவால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.