உணவுப் பாதுகாப்பு அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது வழக்கு
ஆத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டையில் புதன்கிழமை இரவு மரவள்ளிக்கிழங்கு ஆலையில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார். அவரை ஆலை உரிமையாளர்கள் ராஜா சிறைபிடித்தார். மேலும் ஆத்தூர் வட்ட சேகோ மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.துரைசாமி,செயலாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலர்களை சிறைபிடித்ததாக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சரவணன் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நலச் சங்க நிர்வாகிகள் என 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.