சேலம்

மின்சாரம் பாய்ந்து தம்பதி இறந்த சம்பவம்: 2 பேர் கைது

DIN

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்த விவகாரத்தில் , 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆணையாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன்(55), ராமர் (55) ஆகிய இரட்டை சகோதரர்களிடையே நிலத்தகராறு இருந்துவந்தது. இதில், லட்சுமணனும் அவரது மனைவி சம்பூர்ணமும், மின்வேலியில் இருந்த மின்சாரம் தாக்கி சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்தனர். இருவரும் ,திட்டமிட்டு மின்சாரம் தாக்கி உயிரிழப்புக்குக் காரணமாக ராமர் இருந்ததாக எழுந்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தனர். இதுதொடர்பாக ராமர்(55), அவரது மகன் மோகன்(23) ஆகிய இருவரையும் கெங்கவல்லி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT