இடி தாக்கியதில் கோயில் கோபுர சிலைகள் சேதம்
இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியில் திங்கள்கிழமை மாலை இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் சிலைகள் சேதமடைந்தன.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியில் திங்கள்கிழமை மாலை இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் சிலைகள் சேதமடைந்தன.
மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் காடையாம்பட்டி பகுதியில் பலத்த இடிதாக்கியது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயில் கோபுரம் மீது பலத்த இடி தாக்கியதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதமைடந்தன. சுவாமி சிலைகள் சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.