20-20 கிரிக்கெட் போட்டி: ஈரோடு அணி முதலிடம்
சங்ககிரி அருகே சங்ககிரி ஆர்.எஸ். எப்.சி.சி.எம். குழுவின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இப் போட்டியில் ஈரோடு அணி முதலிடம் பெற்றது.
சங்ககிரி அருகே சங்ககிரி ஆர்.எஸ். எப்.சி.சி.எம். குழுவின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இப் போட்டியில் ஈரோடு அணி முதலிடம் பெற்றது.
சங்ககிரி ஆர்.எஸ்.ஸில் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மெம்பர்கள் அமைப்பு சார்பில் 20 -20 கிரிக்கெட் போட்டி மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி நிறைவு பெற்றது.
இப் போட்டியில் ஈரோடு வெஸ்ட் சச்சின் சிசி அணி முதலிடத்திலும், நாமக்கல் விக்டோரி சிசி அணி 2-ஆவது இடத்தையும், சங்ககிரி எஸ்.ஆர்.டி.சி. அணி 3-ஆவது இடத்தையும், சங்ககிரி ஆர்.எஸ். எப்.சி.சி.எம். அணி 4-ஆவது இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம். குமாரசாமி ரொக்கப் பரிசு, சுழற்கோப்பையை வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரமும், 2-ஆவது பரிசாக ரூ. 30 ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ. 20 ஆயிரம், 4-ஆவது பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டன. சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கேபிஆர். செல்வராஜ், பொருளாளர் என்.மோகன்குமார், இணைச் செயலர் எம். சின்னதம்பி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், எப்.சி.சி.எம். குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.