சேலம்

மேட்டூர் பகுதிக்கு தனியார் பேருந்து சேவை நிறுத்தம்

DIN

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு மரணம் அடைந்த நிலையில் மேட்டூர் அருகே தனியார் பேருந்து மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதனால், மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தனியார் பேருந்து சேவை சனிக்கிழமை நிறுத்தப்பட்டன.
சேலத்திலிருந்து மேட்டூர் நோக்கி வந்த தனியார் பேருந்து மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் கல்வீசியதில் பேருந்து கண்ணாடி சேதமடைந்தது. இதனால் மேச்சேரி, பொட்டனேரி, காமனேரி, குஞ்சாண்டியூர், புதுச்சாம்பள்ளி, கருமலைக்கூடல், மேட்டூர், கொளத்தூர், கோவிநதபாடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அரசுப் பேருந்துகள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT