சேலம்

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்  அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு  2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாசனப் பகுதிகளில் நீருக்கான தேவை அதிகரித்ததால் சனிக்கிழமை காலை முதல் பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 6,038 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT