சேலம்

கார்த்திகை மாதம் தொடக்கம்: மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

DIN

கார்த்திகை மாதம் தொடங்கியதை  முன்னிட்டு, சேலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கார்த்திகை முதல் மார்கழி மாதம் கடைசி வாரம் வரை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடிக் கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் தேர்நிலையம் ராஜகணபதி கோயில்,  சுகவனேசுவரர் கோயில், சித்தேஸ்வரா காளியம்மன் கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோயில், சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில், டவுன் ரயில் நிலைய ஐயப்பன்,  ஊத்துமலை முருகன் கோயில் உள்ளிட்ட சிவன், அம்மன்,  விநாயகர், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT