சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், பனை மரங்களை பாதுகாக்கக் கோரி சமூக ஆர்வலர் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.கே.செல்வரத்னம் முதல்வரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழர்களின் அடையாளமாகவும், விவசாயிகளின் அரணாகவும் விளங்கும் நமது மாநில மரமான பனை மரம் இன்றைய சூழலில் அதிகளவில் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு இடைத்தரகர்களால் எரிபொருளாக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் பனைமரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.