சேலம்

அடிப்படை வசதிக் கோரி மலைக் கிராம மக்கள் மறியல்

DIN

ஏற்காடு ஒன்றியம், வெள்ளக்கடை ஊராட்சியில் அடிப்படை வசதிக் கோரி கிராம மக்கள் ஏற்காடு மலைப் பாதையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
வெள்ளக்கடை ஊராட்சி பொதுக் கிணறு இடிந்து பராமரிப்பின்றி  உள்ளது. இதுதொடர்பாக ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை  எடுக்காததால் ஊராட்சி ஒன்றியத்தைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வெள்ளக்கடை கிராமத்தில் பொதுக் கிணறு, அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தினர். ஏற்காடு காவல் ஆய்வாளர், ஏற்காடு வட்டாட்சியர் மற்றும் ஆணையர் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மலைக் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT