முகப்பு
சேலம்

மனைவி நல வேட்பு விழா

சங்ககிரியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:27 AM
பகிர்:

சங்ககிரியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சங்ககிரி மனவளக்கலை அறக்கட்டளைத் தலைவர் என்.பி.என்.பிரகாசம் விழாவுக்கு தலைமை வகித்தார். நிர்வாகி டி.பழனிமுத்து வரவேற்றார்.
 அறக்கட்டளை செயலர் எல்.சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார்.
 மேட்டூர் அம்மாப்பேட்டை முதுநிலை பேராசிரியர் யு.கே.பழனிசாமி, மனவளக்கலையின் செயல்பாடுகள் மற்றும் யோகாவின் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
 ஆசிரியர் குழுத் தலைவர் எஸ்.செல்லப்பா எளிய முறை உடற்பயிற்சி குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.
 அறக்கட்டளை முன்னாள் தலைவர் மருத்துவர் சி.விவேகானந்தன், நிர்வாகிகள் தமிழ்செல்வி, கீதாபன்னீர்செல்வம், சிஆர்எஸ்.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை பொருளாளர் எ.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.