ஆத்தூரில் திமுக வேட்பாளர் பொன். கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ. ராஜா, நகரச் செயலாளர் கே. பாலசுப்ரமணியம், அவைத் தலைவர் முல்லை பன்னீர்செல்வம், இந்திய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ். கே. அர்த்தனாரி, நகரத் தலைவர் எல். முருகேசன், மாவட்டப் பொருளாளர் ஆர். ஓசுமணி, நாட்டாமை செந்தில் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.