சேலம்

ரயில் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலி

DIN

சேலத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி மீது ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
சேலம் மாமாங்கம் பெரியமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (58). கட்டடத் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையிலான போலீஸார் கணேசனின் உடலை மீட்டனர். இது தொடர்பாக சேலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT