சேலம்

பெண்ணிடம்  கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த மூவர் கைது

DIN

சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (67). இவர்  தன்னிடம்  அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தனது 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றதாக அன்னதானப்பட்டி போலீஸில்  ஜூன் 12 ஆம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் பி.குமார் உத்தரவின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சம்பத், அன்பழகன், தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், விஜயகுமார் கொண்ட தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த இளவரசன் (20), திப்பம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் (எ) மன்னார் (21), சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (20) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT