சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 41.76 அடியாகச் சரிவு

DIN

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்யாததாலும்,  கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை வழங்காத காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 41.76 அடியாகச் சரிந்தது. 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை  248 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து  குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு  கூடுதலாக நீர் திறக்கப்படுவதால், வியாழக்கிழமை காலை 41.90 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 41.76 அடியாகச் சரிந்தது.
         அணையின் நீர் இருப்பு 13.01 டி.எம்.சி.யாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூரில் 13.40 மி.மீ.  மழை  பதிவாகி இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதியில் கனமழை பெய்தாலும்,   அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT