சேலம்

சாலை விபத்தில்  பெண் எஸ்.ஐ. பலி

DIN

எடப்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், காவல் துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்.  இவரது மனைவி விஜயா (43).  இத் தம்பதியினருக்கு விஷ்ணுப்பிரியா (23) என்ற மகளும்,  திருலோகசந்தர்(20) என்ற மகனும் உள்ளனர்.
 எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராக  விஜயா பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவர்,  இரு சக்கர வாகனத்தில் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டியிலிருந்து,  பூலாம்பட்டி நோக்கிச் சென்றார்.  எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் பகுதி அருகே சென்றபோது,  கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த விஜயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த விஜயா,  செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த பூலாம்பட்டி போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT