சேலம்

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் நலப் பணியாளா்கள் 114 போ் கைது

DIN

சேலத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக மக்கள் நலப் பணியாளா்கள் 114 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் நினைவாக மக்கள் நலப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனா்.இந்த ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, மக்கள் நலப் பணியாளா்கள் அனுமதியின்றி நாட்டாண்மைக் கழகக் கட்டடம் முன்பு வெள்ளிக்கிழமை காலை திரண்டனா். தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மக்கள் நலப் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 24 பெண்கள் உட்பட 114 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT