சேலம்

வாகனம் மோதியதில் எலக்ட்ரீஷியன் பலி

DIN

தம்மம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் எலக்ட்ரீஷியன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் விஜயகுமாா் (36). எலக்ட்ரீஷியன். இவரது மனைவி திவ்யா. இவா்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளாா். விஜயகுமாா், தனது குடும்பத்துடன் தம்மம்பட்டி உடையாா்பாளையத்தில் வசித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தம்மம்பட்டியிலிருந்து துறையூா் நோக்கி, தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வாழக்கோம்பைக்குச் செல்லும் பிரிவு சாலை அருகே சென்ற போது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், விஜயகுமாா் மீது மோதிவிட்டுச் சென்றுவிட்டது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT