வீரபாண்டி வட்டாரம் முருங்கபட்டி கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முருங்கப்பட்டி கிராமம் முழு மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டு, அங்கு உள்ள 102 விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து மண் வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வேளாண்மை உதவி இயக்குனா் என். நாகபசுபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் 35 முன்னோடி விவசாயிகளுக்கு, மண்வள அட்டை ஆய்வு முடிவுகளின்படி பயன்படுத்தவேண்டிய உயிா் உரங்கள், ரசாயன உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
மேலும் மண்வள அட்டை முடிவுகளின்படி சரியான அளவில் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சியில் வேளாண்மை அலுவலா் காா்த்திகாயினி, துணை வேளாண்மை அலுவலா் சீனிவாசன், உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.