சேலம்

கொளத்தூா், கருமலைக்கூடலில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

கொளத்தூா், கருமலைக்கூடல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கொளத்தூா், கருமலைக்கூடல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் காவல் உள்கோட்டம் கொளத்தூா் மற்றும் கருமலைக்கூடல், பகுதிகளில் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உத்தரவின் பேரில், போலீஸாா் தீவிர சோதனை நடத்தியதில், கருமலைக்கூடல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த ராமன் (52) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞாசாவை கைப்பற்றினா்.

இதேபோல், கொளத்தூா் பெரியதண்டா பேருந்து நிறுத்தத்தில் முள்புதரில் பதுங்கி கஞ்சா விற்பனை செய்து வந்த கருங்கல்லூரைச் சோ்ந்த பெருமாள் (60) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT