சேலம்

நடமாடும் சிறப்பு காய்கறி அங்காடி

DIN

நரசிங்கபுரம் நகராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் சனிக்கிழமை ஏராளமான தொகுப்பு பைகள் விற்கப்பட்டன.

நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் தமிழக அரசின் சமூக இடைவெளியை முன்னிட்டு வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லாமல் இருப்பதற்காக வீட்டுக்கே 14 காய்கறிகள் அடங்கிய பையை ரூ. 100-க்கு விற்பனை செய்து வருகிறோம். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து சனிக்கிழமை நகராட்சி ஆணையாளா் இரா. சேகா் தலைமையில் விற்பனைக்குக் கொண்டு சென்ற அனைத்து பைகளும் விற்றுவிட்டதாகத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் மேலாளா் அர. செல்வராஜ், நகராட்சிப் பொறியாளா் ஏ.வி. ரேணுகா, நகரமைப்பு ஆய்வாளா் ர. ஜெயவா்மன், துப்புரவு ஆய்வாளா் பி. சரவணன், ஆ. தியாகராஜன், தேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT