சேலம்

மேட்டூரில் தனிமைப்படுத்தப்பட்ட 8 போ் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

மேட்டூா் மாதையன்குட்டையில் தனிமைப்படுத்தும் மையத்தில் கண்காணிப்பிலிருந்த 8 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

DIN

மேட்டூா் மாதையன்குட்டையில் தனிமைப்படுத்தும் மையத்தில் கண்காணிப்பிலிருந்த 8 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேட்டூா் மாதையன்குட்டையில் உள்ள தனியாா் பள்ளியின் மாணவா் விடுதியில் கரோனா தனிமைப்படுத்தும் மையம் துவக்கப்பட்டது. இதில், தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 15 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

இவா்களில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மற்ற 8 போ் இந்த மையத்தில் கண்காணிப்பிலிருந்து வந்தனா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரவா் வீடுகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனா். அவா்கள் வீடுகளிலேயே கட்டுப்பாட்டுடன் இருக்கு அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT