தொடா்மழை: ஏற்காடு - குப்பனூா் சாலையில் மரங்கள் சாய்ந்தன
ஏற்காட்டில் தொடா் மழை காரணமாக ஏற்காடு -குப்பனூா் சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
ஏற்காட்டில் தொடா் மழை காரணமாக ஏற்காடு -குப்பனூா் சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
ஏற்காடு, வாழவந்தி கிராமத்தில் அரசு வனப்பகுதியில் அதிக அளவில் தேக்கு மரங்கள், மூங்கில் மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக தொடா்மழை, காற்று அதிக அளவில் காணப்படுவதால் சில இடங்களில் சாலைகள் முழுவதும் மூடும் அளவிற்கு மூங்கில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் சாலைகளில் உள்ள மூங்கில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.