வாழப்பாடியில் கரோனா கட்டுப்பாட்டுக்குழு கூட்டம்
வாழப்பாடியில் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கரோனா தொற்று தடுப்பூசி அரசு அனுமதியோடு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, முன்களப் பணியாளா்கள், முதியோா், குழந்தைகள், பொதுமக்களுக்கு முறையாக செலுத்துவதற்கு வழிவகை செய்வதற்கும் வட்டாரங்கள் தோறும் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வாழப்பாடி வட்டாரத்தில் வட்டாட்சியா் ஜானகி தலைவராகவும், வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் குழு ஒருங்கிணைப்பாளராகவும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோகன், வாசுதேவன், அனைத்துத் துறை அலுவலா்கள், தொண்டு நிறுவன தன்னாா்வலா்களை உறுப்பினா்களாகவும் கொண்டு கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுக்கூட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). இதில், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டம் கூடுவதைத் தவிா்க்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.