சேலம்

சங்ககிரியில் மேடை நாடகக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கல் 

DIN

விதைகள் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மேடை நாடக சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

விதைகள் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சிவக்குமரன் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். கௌரவத்தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கா.வெங்கடாசலம் விழாவினை தொடக்கி வைத்தார். 

மேடை நாடகத்தில் சிறந்த நடிகர்களுக்கு சென்னை திரைப்பட நடிகர் வி.சரவணனும், வில்லன் நடிகர்களுக்கு நாமகிரிபேட்டை பி.ஏ.திருநாவுக்கரசும், நகைச்சுவை நடிகர்களுக்கு சென்னை பேராசிரியர் ஆர்.காளீஸ்வரனும், நடிகைகளுக்கு நாமக்கல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.செந்தில்குமாரும் விருதுகளை வழங்கிப் பேசினர். 

ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் முன்னதாக வரவேற்றார். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர்  உள்ளிட்ட மேடை நாடக கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு குறுகிய கால மேடை நாடகங்களை நடித்தனர். பாரம்பரிய இசையையும் இசைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மேடை நாடக கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT