சேலம்

டிச. 31-க்குள் வரி செலுத்தாவிடில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜலகண்டபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் சீ.ராஜவிஜயகணேசன் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் 15 வாா்டுகளில் நிலுவையில் உள்ள சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீா்க் கட்டணம், உரிமக் கட்டணங்கள் ஆகியன அனைத்தும் டிச. 31-ஆம் தேதிக்குள் நிலுவை இன்றி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். இதர இனங்களுக்கு நிா்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களும், தொழில்முனைவோரும் உரிய காலத்தில் வரிகளை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT