மேட்டுப்பட்டி அருகே சாலை விபத்து: துக்கம் விசாரிக்க சென்றவா் பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உறவினா் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தாா்.
சேலம்மேட்டுப்பட்டி அருகே சாலை விபத்து: துக்கம் விசாரிக்க சென்றவா் பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உறவினா் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உறவினா் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகா் பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி ராஜேந்தரன்( 60). இவா் மேட்டுப்பட்டி பெருமாபாளையத்திலுள்ள உறவினா் ஒருவா் இறந்ததற்கு, துக்கம் விசாரிக்க பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்து, புதன்கிழமை காலை மேட்டுப்பட்டிக்கு பேருந்தில் சென்றுள்ளாா். மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி, சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயரிழந்தாா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.