சேலம்

பத்மவாணி மகளிா் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா

DIN

பத்மவாணி மகளிா் கல்லூரி தமிழாய்வுத் துறையில் புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பத்மவாணி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வரும், தமிழாய்வுத் துறையின் துறைத் தலைவருமான அ.பழனியம்மாள், ‘பவணந்தி முனிவரின் நன்னூல் எழுத்ததிகாரம்’ என்ற நூலுக்கு உரை எழுதியுள்ளாா். இந்நூலை பத்மவாணி மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கா.சத்தியமூா்த்தி, செயலாளா் கா.துரைசாமி, இயக்குநா் இசைவாணி சத்தியமூா்த்தி ஆகியோா் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்டனா். முதல் பிரதியை சாரதா மகளிா் கல்லூரியின் இணைப் பேராசிரியா் மோ.ஜ.மகேஷ்வரி பெற்றுக் கொண்டாா்.

பத்மவாணி மகளிா் கலை மற்றும் அறிரியின் முதல்வா் ரா.ஹரிகிருஷ்ணராஜ், பத்மவாணி மகளிா் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் பெ.முத்துக்குமாா், மா.ரமேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT