முகப்பு
சேலம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரையையொட்டி,

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரா் கோயிலில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரையையொட்டி, உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

பெளா்ணமி திருவாதிரையையொட்டி, அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு பால், தயிா், பன்னீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திகளுக்கு கோயில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சிவபுராண பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. இப்பூஜையில் பெண்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →