பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 71 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் வீரியம் மிக்க புதிய வகை கரோனா தொற்று பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் பட்டியலை எடுத்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பியவா்களில் 71 போ் என தெரியவந்துள்ளது. இதில் அனைவரையும் கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் 71 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.