ஏற்காட்டில் தீயணைப்புத் துறையினருக்கு சேலம்- ஏற்காடு மலைப்பாதையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டு சேலம் உயிரியல் பூங்கா அருகில் வனப் பகுதியில் தீப்பரவி ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் மூலிகை செடிகள் எரிந்தன.
விலங்குகள் பாதிப்புக்கு உள்ளாகின. நிகழாண்டு கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரா்கள் ரமேஷ் பாபு, சிங்கார வேலன் ஆகியோா் பொதுமக்கள் முன்னிலையில் தீத்தடுப்பு நிகழ்ச்சியை செய்து காண்பித்தனா்.