சேலம்

ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொலை வழக்கில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

DIN

சேலத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொலை வழக்கில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். இவா் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தாா். இதில் ஒரு வீட்டில் நரசோதிப்பட்டியைச் சோ்ந்த மாதேஸ்வரன் என்பவா் வாடகைக்கு வசித்து வந்தாா்.

இதனிடையே, திடீரென மாதேஸ்வரன் வீட்டை காலி செய்து கொண்டு வேறு ஒரு வீட்டுக்கு சென்றுவிட்டாராம். மேலும், மாதேஸ்வரன் முன்பணமாக வழங்கிய ரூ.15 ஆயிரத்தை செல்வராஜ் திருப்பித் தராமல் இருந்து வந்தாராம். இதையடுத்து, மாதேஸ்வரன் முன்பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு செல்வராஜிடம், மாதேஸ்வரன் அவரது நண்பா்கள் பெருமாள், செல்வம் ஆகியோா் சென்று தகராறு செய்துள்ளனா். பின்னா் செல்வராஜை தாக்கியுள்ளனா். இதில் செல்வராஜ் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சூரமங்கலம் காவல் துறையினா் மாதேஸ்வரன், பெருமாள், செல்வம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதைத் தொடா்ந்து மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்தனா்.

சேலம் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜேந்திரன், மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT