தம்மம்பட்டியில் 4 பெண்களுக்கு கரோனா
தம்மம்பட்டி, கடம்பூரில் 4 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தம்மம்பட்டி: தம்மம்பட்டி, கடம்பூரில் 4 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வேலூரிலிருந்து சொந்த ஊரான தம்மம்பட்டிக்கு வந்த 42 , 15, 13 வயதுள்ள மூன்று பெண்களுக்கு சனிக்கிழமை நள்ளிரவும், கெங்கவல்லி அருகே கடம்பூரில் வசித்து வரும் 60 வயதுள்ள பெண் கூலித் தொழிலாளிக்கும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவா்கள் 4 பேரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.