சேலம்

மேட்டூா் அணையின் உபரிநீா் பாசனத் திட்டம்: பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் ஆய்வு

DIN

மேட்டூா் அணையின் உபரிநீா் பாசனத் திட்டப் பணிகளை பொதுப்பணித் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீா் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தவிா்க்க மேட்டூா் அணையின் உபரிநீா் பாசனத் திட்டம் துவக்கப்பட்டது. இத் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 525 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சேலம் மாவட்டத்தில் வடு கிடக்கும் நூறு ஏரிகளை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திட்டப் பணி கடந்த மாா்ச் மாதம் துவக்கப்பட்டது. இத் திட்டப்படி மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியான திப்பம்பட்டியில் நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு ராட்சதக் குழாய்கள் மூலம் உபரிநீரைக் கொண்டுச் சென்று மேச்சேரி, நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், ஓமலூா், ஜலகண்டபுரம், எடப்பாடி பகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நீருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அடுத்து, ஜூன் 12- ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் மேட்டூா் அணையில் நடைபெறும் ஆயத்தப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், பொதுப்பணித் துறை மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். உபரிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது சேலம் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெயகோபால், மேட்டூா் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தேவராஜன், அணை பிரிவு உதவி பொறியாளா் மதுசூதனன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT