சேலம்

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

DIN

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும். மத்திய அரசின் விவசாய மின்சார ரத்து முடிவுக்கு மாநில அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். வேளாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வக்கிர குளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கே. சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் ராஜேஷ் முருகன், சொக்கலிங்க குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT